மேலூர், ஜூலை 18: கொட்டாம்பட்டி அருகே லாரியில் பேரல் ஏற்றிய போது மின்சாரம் தாக்கியதில் டிரைவர் உயிரிழந்தார். கிளீனர் படுகாயமடைந்தார். கொட்டாம்பட்டி அருகே காரியேந்தில்பட்டியில் உள்ள தார் கலவை தொழிற்சாலையில் கீழவளவை சேர்ந்த முருகேசன் (39) என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலி பேரல்களை லாரியில் ஏற்றும் பணியில் முருகேசனும், இவரது உதவியாளர் சமுத்திராபட்டியை சேர்ந்த பாண்டியும் (40) ஈடுபட்டிருந்தனர். லாரியின் உயரம் கூடுதலாக இருந்ததால் பேரல்களை ஏற்ற முடியவில்லை. இதனால் டிரைவர் லாரியின் பின்பக்கத்தை உயர்த்தியுள்ளார்.