சரிசெய்ய கோரிக்கை நினைவு பரிசு நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை, ஜூலை 18: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை ( ஜூலை 19, வெள்ளி) நடத்துகின்றன.முகாமில் பிரபல தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து ெகாண்டு, ஆட்களை தேர்வு செய்கின்றன. 10ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ. டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணியளவில் மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இம்முகாம் மூலம், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது. இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: