×

மாற்று பாதை சேதத்தால் வலையபட்டிக்கு வர மறுக்கும் பஸ்கள்

திருமங்கலம், ஜூலை 18: மாற்று பாதை சேதத்தால் திருமங்கலம் அருகே எஸ்.வலையபட்டிக்கு டவுன் பஸ்கள் வர முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.வலையபட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருமங்கலத்தில் இருந்து சேடபட்டி செல்லும் மெயின்ரோட்டில் இருந்து 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இவ்வூருக்கு மதுரை, திருமங்கலத்தில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊரின் நுழைவு பகுதியில் சிறிய பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வருகிறது. இதனால் வலையபட்டி பஸ்கள் சென்று வர வசதியாக பால பணி நடக்கும் இடம் அருகே மாற்றுப்பாதை அமைக்கப்படடது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த மாற்றுப்பாதை முற்றிலும் சேதமடைந்தது. இதனால் வலையபட்டிக்கு கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பஸ்கள் இயக்க முடியாத உள்ளது. சவுடார்பட்டியுடன் பஸ்கள் திரும்புவதால் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து திருமங்கலம் அரசு போக்குவரத்து கிளையில் கேட்டபோது, ‘பால பணியையொட்டி அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை மழையால் முற்றிலும் அரித்து விட்டது. இதனால் வலையபட்டிக்குள் பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் மாற்றுப்பாதையை சரிசெய்து கொடுத்தால் வழக்கம்போல் பஸ்கள் சென்று திரும்ப முடியும்’ என்றனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...