×

விரைந்து முடிக்க கோரிக்கை திருமங்கலம் விவசாயிகளுடன் மத்தியகுழு கலந்துரையாடல்

திருமங்கலம், ஜூலை 18: கிராமபகுதிகளில் மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக செயல்படுகின்றனவா என்பதனை ஆய்வு செய்யும் நோக்கில் மத்திய அரசின் குழுவினர் மதுரை மாவட்டத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருமங்கலம் ஒன்றியம் சாத்தங்குடியில் மத்திய அரசின் வேளாண்மைத்துறை இணை செயலாளர் சுகுட்முத்ரா தலைமையிலான குழுவினர் விவசாயிகளை சந்தித்து பேசினர். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து கேட்டறிந்தனர். மேலும் மழையளவு எவ்வளவு, கடந்த காலங்களில் மழைபொழிவு எவ்வளவு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் எழுந்துள்ள பாதகங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து விவசாயிகள் அமைத்துள்ள சொட்டுநீர் பாசனமுறையையும் பார்வையிட்டனர். மத்திய குழுவினருடன் பிடிஓக்கள் சூரியகலா, உதயகுமார் சென்றனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை