திண்டுக்கல், ஜூலை 18: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 26ல் துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. இரவு 12மணிக்குள் வீதியுலா நடத்த போலீசார் கட்டுப்பாடு விதிப்பால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆடித்திருவிழா ஜூலை 26ல் காலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, 5;30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு விசேஷ பூஜை, காலை 6:30 மணிக்கு அம்மன் வீதியுலா ஆரம்பமாகும். வீதியுலா திண்டுக்கல் மேற்கு ரதவீதி, கச்சேரி தெரு, காமராஜபுரம், மவுன்ஸ்புரம், தாடிக்கொம்பு ரோடு முதல் நந்தவனம் ரோடு வரை, பள்ளிவாசல் தெரு, கிழக்கு கோவிந்தாபுரம், அண்ணாநகர், விவோகனந்தாநகர் ஆகிய தெருக்களில் வரும். தரகுமண்டி குமஸ்தாக்கள் சங்க மண்டபம், நாராயண அய்யர் திருமண மண்டபம், மேட்டுராஜக்காபட்டி காளியம்மன் கோயிலில் இரவு தளிகை பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.