ஸ்பிக்நகர், ஜூலை 18: தூத்துக்குடி மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்பப்பெற வேண்டும். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை துரிதமாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கட்சியின் புறநகர் செயலாளர் ராஜா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் பூமயில் புற நகர் குழு உறுப்பினர் ராமசாமி, முருகன், வெள்ளைச்சாமி, சுதா, கிளைச் செயலாளர்கள் சுப்பையா, கிருஷ்ண பாண்டி, வீரபெருமாள், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.