×

பெருகவாழ்ந்தான் அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

மன்னார்குடி, ஜூலை. 18: பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் காம ராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள், 10 ம் மற்றும் 12 ம் வகு ப்பு அரசு பொது தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பள்ளி சீரமைப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார். விழாவையோட்டி தொழில் அதிபர் ஒருவரின் நிதியுதவி மூலம் ரூ 7 லட்சம் மதிப்பில் நீர்முழ்கி மோட்டாருடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி துவக்க விழா நடைபொற்றது.விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் சந்திரசேகரன், வழக்கறிஞர் வீரமணி, பெருவைசந்தோஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்