×

குடித்து விட்டு தகராறு ெசய்து கணவன் திட்டியதால் கர்ப்பிணி தற்கொலை: வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது

மன்னார்குடி, ஜூலை 18: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துண்டக்கட்டளை மெயின் ரோட்டில் வசிப்பவர் சக்திவேல் (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுபா (26). இருவருக்கும் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் சுபா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சக்திவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சக்திவேல் சுபாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த சுபா புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்ததும் மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சுபாவின் உடலை கைப்பற்றி மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சுபாவின் வயிற்றில் இருந்த பெண் சிசுவும் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சுபாவின் தந்தை சுந்தரம் மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சக்திவேல் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மகளிடம் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் அவர் தூக்கிட்டு இறந்ததில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து எஸ்ஐ சிவகுகன் வழக்கு பதிவு செய்து சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்