×

திருவாரூர் நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா? ரூ.1 கோடி மதிப்பில் வாய்க்கால் மதகுகளில் குடிமராமத்து பணிகள்

மன்னார்குடி, ஜூலை 18: கோட்டூர் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியங்களில் ரூ.1கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட குலமாணிக்கம், நந்திமாங்குடி, ராயநல்லூர், மழவராயன்நல்லூர் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டக்குடி ஆகிய கிராமங்களில் ரூ.99 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் பாசனதாரர் சங்கங்கள் மூலம் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ரூ.18லட்சத்து ஆறாயிரம் மதிப்பில் ஒட்டக்குடி வாய்க்காலில் பொக்லைன் இயந்திரம் மூலம் காட்டா மணக்கு செடிகள் மற்றும் மண் திட்டுகளை அகற்றி தூர்வாருதல், மதகுகள் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகள் குறித்து பாசனத்தாரர் சங்க பிரதிநதிகளிடம் கேட்டறிந்து, பணிகளை முழுமையாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினார். வெண்ணாறு வடிநில கோட்ட பொறியாளர்களிடம் பணிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து குலமாணிக்கம் கிராமத்தில் ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் குலமாணிக்கம் அமராவதி வாய்க்கால், பெரியகுருவாடி வாய்க்கால் மற்றும் அமராவதி வடிகால் தூர்வாரும் பணிகள் நடப்பதை பார்வையிட்டு, வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ள அளவீடுகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் நந்திமாங்குடி கிராமத்தில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நந்திமாங்குடி வடிகால் வாய்க்கால் பாசனதாரர் சங்கம் மூலம் தூர்வாரும் பணிகளையும், நீர்குமிழி மதகு கட்டுமானம் பழுது நீக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கோட்டூர் ஒன்றியம் ராயநல்லூர் கிராமத்தில் ரூ.17 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் முள்ளியாற்றின் முள்ளியாற்றின் வலது கரையில் பிரியும் மேட்டுப்பாளையம் வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் தலைப்பு மதகு பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மழவராயன்நல்லூர் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் சேரிதட்டான் கோவில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு அப்பணியில் ஈடுபட்டுள்ள பாசன சங்க பிரதிநிதிகளிடம் பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். அப்போது வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் செல்லம் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...