குடந்தை பஸ்ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத வாலிபர் சாவு

கும்பகோணம், ஜூலை 18: கும்பகோணம் புதிய பஸ்ஸ்டாண்டில் ஒரு வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றார் என்று மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது 35 வயது மதிக்கதக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவர் கைலி, சட்டை அணிந்திருந்தார். பின்னர் விசாரணை நடத்தியில் அவர் எந்த என்பது தெரியவில்லை. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு வாலிபரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: