×

விவசாயிகள் மனு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தபால் தலை வெளியிட வேண்டும்

கும்பகோணம், ஜூலை 18: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தபால் தலை வெளியிட வேண்டுமென கும்பகோணம் சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலாமாண்டு நினைவு தினம் ஆகஸ்ட் மாதம் வருகிறது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் 13 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும, ஐந்து முறை தமிழக முதல்வராக அங்கம் வகித்து அரிய சாதனைகள் படைத்த தலைவர் கருணாநிதி. அரசியல், சமூகம், கலை என பல்வேறு துறைகளில் பங்கேற்று அதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்ட மாபெரும் தலைவர் கருணாநிதி. எனவே கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று அவரது உருவம் பதித்த சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு அஞ்சல் உரையை வெளியிடுவதோடு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டுமென கும்பகோணம் சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...