புதுக்கோட்டை, ஜூலை 18: புதுக்கோட்டை திருவப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகப்பை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி ராகவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகப்பை மற்றும் காலணிகளை வழங்கி பேசினார். இதில் பள்ளி துணை ஆய்வாளர் ஜெயராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலெட்சுமி உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.