பொன்னமராவதி, ஜூலை 18: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அச்சுகாட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் மேலத்தானியம், ஆலங்குளம் என்ற இடத்தில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன், டிப்பர் லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. வேனை பறிமுதல் செய்து உரிமையாளர் வேலாயுதத்தை கைது செய்தனர்.