கந்தர்வகோட்டை, ஜூலை 18: கந்தர்வகோட்டை ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தொடங்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வந்தடைந்தது பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசமணி மற்றும் குமரன் தொடக்கி வைத்தனர். பேரணியில் கந்தர்வகோட்டை ஊராட்சி செயலர் ரவி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள், பல்வேறு ஊராட்சி செயலர்கள் கலந்துக் கொண்டனர்.