×

கந்தர்வகோட்டை அருகே தீவிபத்தில் பாதித்தோருக்கு நிவாரண பொருள் வழங்கல்

கந்தர்வகோட்டை, ஜூலை 18:
கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல்பட்டியில் விவசாயின் குடிசை வீடு தீக்கிரையானது. இதை தொடர்ந்து அவருக்கு தாசில்தார் நிவாரண பொருட்களை வழங்கினார்.கந்தர்வகோட்டை தாலுகா மஞ்சம்பேட்டை வட்டம் புனல்குளம் வருவாய் கிராமம் தெத்துவாசல்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி. விவசாயி. நேற்று முன்தினம் மதியம் இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீக்கிரையானது. இதில் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.இந்நிலையில் நேற்று தாசில்தார் கலைமணி தீவிபத்தில் பாதித்த கருணாநிதிக்கு நிவாரணமாக ரூ.5ஆயிரம், அரிசி, வேஷ்டி சேலை வழங்கினார். அது சமயம் துணை தாசில்தார் செல்வகணபதி, புதுநகர் சரக வருவாய் ஆய்வாளர் உமாபதி, மஞ்சம்பேட்டை விஏஓ கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ