×

புதுக்கோட்டையில் இன்று பயிர் காப்பீட்டு திட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 18: புதுக்கோட்டையில் பிரதம மந்தியின் பயிர் காப்பீட்டு திட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான ஜூலை மாதத்திற்கான விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (18ம் தேதி) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு சம்பந்தமான விபரங்களை அளித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா