×

அரியலூரில் நாளை புத்தக திருவிழா துவக்கம் முன்னேற்பாடு பணி ஆய்வு

அரியலூர், ஜூலை 18: அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நாளை முதல் வரும் 29ம் தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. புத்தக திருவிழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்கிறார். மேலும் 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முக்கிய பிரமுகர்களை கொண்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதைதொடர்ந்து அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருவதை கலெக்டர் வினய் நேற்று ஆய்வு செய்தார். அரியலூர் ஆர்டிஓ சத்தியநாராயணன், நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...