×

கடைகளில் விற்பனை செய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

அரியலூர், ஜூலை 18: அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தில் கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அஸ்தினாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கந்தசாமி (48), தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (63) ஆகியோர் தங்களது மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...