×

அரியலூரில் ஆகஸ்ட் 28ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மனுக்கள் அனுப்ப 13ம் தேதி கடைசி

அரியலூர், ஜூலை 18: அரியலூரில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 28ம் தேதி நடக்கிறது. குறைகள் தொடர்பான மனுக்களை வரும் 13ம் தேதிக்குள் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வரும் 13ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்