×

பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர முடியாமல் தவிப்பு அரியலூர் மாவட்டத்தில் நாளை 6 இடங்களில் சிறப்பு குறைதீர் முகாம் மக்கள் பயன்பெற அழைப்பு

அரியலூர், ஜூலை 18: அரியலூர் மாவட்டத்தில் நாளை 6 இடங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் மக்கள் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 7வது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில் வட்டத்துக்கு 2 கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. அந்தந்த தாசில்தார்கள் தலைமை வகிக்கின்றனர். அதன்படி அரியலூர் வட்டத்தில் பொட்டவெளி, கோவில் எசனை (மேற்கு) ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் அங்கராயநல்லூர் (மேற்கு), சோழமாதேவி ஆகிய கிராமங்களிலும் சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. மேலும் செந்துறை வட்டத்தில் பொன்பரப்பி கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் காட்டாத்தூர் (வடக்கு) கிராமத்திலும் நடக்கிறது. முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...