×

மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி

கடையநல்லூர், ஜூலை 18: கிருஷ்ணாபுரத்தில் கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியானார். கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி  பாரதியார் தெருவை சேர்ந்த சங்கிலிபூதத்தார் (64). கொத்தனரான இவர், நேற்று முன்தினம் மாலை கடையநல்லூர்  கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி தரப்பட்டு மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், எஸ்ஐ விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை