×

சந்திர கிரகணத்தையொட்டி வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர்

வேதாரண்யம், ஜூலை 18: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சந்திரகிரகனத்தை முன்னிட்டு பெரியவௌ–்ளி ரிஷப வாகனத்தில் மலர்களால் கல்யாண சுந்தரர் அலங்கரிக்கப்பட்டு கோயிலிருந்து கடற்கரைக்கு இரவு 2 மணிக்கு ஊர்வலமாக எடுத்து கொண்டு சென்றனர். பின்னர் அங்கு அஸ்தரதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கடலில் தீர்வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி அஸ்ததேவரை வழிப்பட்டனர். பின்னர் சுவாமி கோயிலை வந்தடைந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். சந்திரகிரகனத்தை முன்னிட்டு இரவு 2 மணிமுதல் அதிகாலை வரை கடற்கரை மற்றும் கோயிலில் உள்ள மணிகரிணிகை சேதுபதி மண்டபத்திலும் தர்ப்பணம் செய்து பக்தர்கள்வழிப்பட்டனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...