×

தருமகுளம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சீர்காழி, ஜூலை 18: சீர்காழி வட்டார சுகாதாரத்துறை சார்பில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜ்மோகன் மேற்பார்வையில் தருமகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் கலன்கள், டெங்கு கொசுப்புழு மாதிரி காண்பித்து காண்டிக்கப்பட்டது.இதில் சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், அமிர்தலிங்கம், ரெங்கராஜன், கொளஞ்சியன், பள்ளி ஆசிரியர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...