×

பொதுமக்கள் தீபம் எண்ணையை சமையலுக்கு பயன்படுத்த கூடாது உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அறிவுறுத்தல்

கடவூர், ஜூலை18: கடவூர் ஒன்றியத்தில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது தீபம் எண்ணையை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினார்.கடவூர் ஒன்றியத்தில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் டாக்டர்.சசி தீபா தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். கடவூர் ஒன்றியத்தில் தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய்யை தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய் குறைந்த விலை இருப்பதால் இதை சமையலுக்கு வழங்குவதாக வந்த புகாரை அடுத்து கடவூர் மற்றும் தரகம்பட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு செய்தனர்.மேலும் பொதுமக்கள் தீபம் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. கடை உரிமையாளர்கள் தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய்யை எதற்காக பயன்படுத்தப் போகிறீர்கள் என கேட்டு வழங்க வேண்டும். இந்த எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் குடல் புண்,மலச்சிக்கல், கேன்சர், செரிமானக் கோளாறு கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆய்வின் போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு