×

கடையில் நள்ளிரவில் தீ: ரூ.10 ஆயிரம் பொருட்கள் சேதம்

குளித்தலை, ஜூலை 18: கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகர் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (70). இவர் அப்பகுதியில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.வழக்கம்போல் இவர் நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் இந்நிலையில் நள்ளிரவில் பெட்டிக்கடை தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்துள்ளது அப்போது அருகில் இருந்தவர்கள் பார்த்துதண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் பெட்டிக் கடையில் இருந்த ரூபாய் 4 ஆயிரம் மற்றும் கடை பொருட்கள் என பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...