×

பைபாஸ் சாலையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்ட கம்பம் காற்றில் விழுந்ததால் பரபரப்பு

கரூர், ஜூலை 18: பைபாஸ் சாலையில் கேமரா அமைக்கப்பட்டிருந்த கம்பம் காற்றில் சரிந்து விழுந்தது.கரூர்- மதுரை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சரிசெய்வதற்காக கண்காணிப்பு கேமரா கம்பத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்தது. காற்று கடந்த சில நாட்களாக பலமாக வீசி வருகிறது. இந்த கம்பம் கரூர் பைபாஸ் சாலை மண்டிக்கடை அருகே அமைக்கப்பட்டிருந்தது. காற்றின் காரணமாக சரிந்து விழுந்து விட்டது. கேமரா பொருத்தப்பட்ட இந்த கம்பத்தை ஓரமாக எடுத்து வைத்துள்ளனர். இதனை சரிசெய்து மீண்டும் முன்புபோல அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது