×

அதிக பாரம் ஏற்றி செல்லும் வேன்களால் விபத்து அபாயம்

கரூர், ஜூலை 18: அதிக பாரம் ஏற்றி விபத்து ஏற்படும் வகையில் வேன்கள் செல்கிறது.கரூர் பகுதியில் சரக்குவேன்களில் அதிக அளவில் பாரம் ஏற்றிசெலகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் பாரம் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பின்னால் வரும்வாகனங்கள் முந்திசெல்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. சாலையின் வளைவுகளில் எதிர்த்திசையில் வாகனங்கள் வருவது தெரியாமல் ஓட்டுனர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். மேலும் சரக்கு வேன்கள் பாரம் இறக்கிவிட்டு வரும்போது அதிகவேகத்தில் வருகின்றன.அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...