×

விளையாட்டு மைதான பகுதியில் சாலை பணி விரைந்து முடிக்க வேண்டும் வாகனஓட்டிகள் வலியுறுத்தல்

கரூர், ஜூலை18: கரூர் மாவட்ட விளையாட்டு மைதான பகுதியில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் கலெக்டர் அலுவலக வளாக பின்புறம் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. விளையாட்டு மைதானத்தின் பின்புற பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதி கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பிற்படுத்தப்பட்டோர் விடுதி வரை சாலை போடும் வகையில், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இதனையடுத்து, விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், எந்தவிதமான பணியும் மேற்கொள்ளப்படவில்லை.இதன் காரணமாக, நாளாக நாளாக கற்கள் பெயர்ந்து, தற்போது நடந்து செல்ல கூட முடியாத அளவில் சாலையில் நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, அரைகுறையாக விடப்பட்டுள்ள இந்த சாலைப்பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு