×

ரயில் நிலையத்தில் நர்சிடம் சில்மிஷம் வாலிபர் கைது

திருவள்ளூர், ஜூலை 18: நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த நர்சிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை திருவள்ளூர் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்தவர் மாலதி(20). (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக நெமிலிச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்து, ரயிலுக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த நபர், மாலதியின் பக்கத்தில் உட்கார்ந்து திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் திருவள்ளூர் ரயில் நிலைய போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ரயில்வே போலீசார், போதை வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், கூடப்பாக்கம் முன்னாள் ராணுவ குடியிருப்பை சேர்ந்த ரங்கன் மகன் மோகன்(27) என தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...