×

பைக் மீது மினி லாரி ேமாதல் தனியார் பள்ளி ஆசிரியை பலி: செங்குன்றத்தில் பரிதாபம்

புழல், ஜூலை 18: செங்குன்றத்தில் பைக் மீது மினி லாரி ேமாதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். செங்குன்றம் அடுத்த எம்.ஏ.நகர் நேதாஜி முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு (42). இவரது மனைவி லதா (38), அம்பத்தூர் அடுத்த புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல கணவருடன் பைக்கில் பள்ளிக்கு புறப்பட்டார் லதா. செங்குன்றம் அடுத்த அம்மையார் இ.என் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மினி லாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில், லதா நிலைதடுமாறி கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். மனைவியின் உடலை பார்த்து கணவன் கதறி அழுதார்.தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான திருநெல்வேலியை சேர்ந்த மகேந்திரன் (38) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...