×

தனித்தனி சாலை விபத்து ஒரே நாளில் 2 பேர் பலி

ஆவடி, ஜூலை 18: அம்பத்தூர் தொழிற்பேட்ைடயில் ஒரே நாளில் இரண்டு பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த நிருநின்றவூர் அம்பிகா நகர், ராஜிவ்காந்தி தெருவைத் சேர்ந்தவர் மகேஷ் குமார் (44). டிரைவர். நேற்று முன்தினம் மாலை மகேஷ்குமார் வேலை விஷயமாக யப்பாக்கத்துக்கு பைக்கில் சென்றுள்ளார். பின்னர், அவர் அம்பத்தூர் - வானகரம் சாலை வழியே வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த வாகனம் பைக் மீது மோதியது. இதில், ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனாலும், ஹெல்மெட்டுடன் தலை நசுங்கி மகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார்.
 
இதேபோல், அம்பத்தூர் அடுத்து பாடி, பெரியார் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் அனில்குமார் (44). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் அதிகாலை அனில்குமார் வேலை முடிந்து கம்பெனியிலிருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, 1வது மெயின் ரோட்டில் வந்தார். அப்போது அந்தப் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் வழுக்கி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அனில்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேற்கண்ட 2 விபத்துகள் குறித்தும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...