துரைப்பாக்கம், ஜூலை 18: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 196வது வார்டுக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் மயான பூமியில் எரிவாயு எரியூட்டகம் உள்ளது. இங்கு, பஞ்சாப் யூத் அசோசியேஷன் ரெஜிஸ்டேட் (பியார்) என்ற அறக்கட்டளை சார்பில் சுமார் ₹30 லட்சம் மதிப்பீட்டில் ஈமச்சடங்கு செய்யும் மண்டபம், காத்திருக்கும் அறை, இருக்கைகள், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பார்க்கிங் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.
இதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு ஈமச்சடங்கு மண்டபம், காத்திருப்போர் அறை ஆகியவற்றை திறந்து வைத்தனர்.