×

பூதப்பாண்டி அருகே பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி

பூதப்பாண்டி, ஜூலை 18: பூதப்பாண்டியை அடுத்துள்ள ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான வீடு பூதப்பாண்டியை அடுத்துள்ள அப்துல்கலாம் நகரில் உள்ளது. அதை பொன்னம்மாள் பராமரித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு பொன்னம்மாள் அந்த வீட்டை சுத்தம் செய்ய செல்லும் போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொன்னம்மாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் எல்லாம் சிதறி கிடந்தது. ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பின்பக்க கதவையும் உடைத்து வெளியேறி உள்ளான். இந்த சம்பவம் குறித்து பொன்னம்மாள் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு