திண்டிவனம், ஜூலை 18: திண்டிவனத்தில் ராஜாங்குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் நகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் துவங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். டெல்லியில் இருந்து வந்திருந்த நீர்வள மேலாண்மை சிறப்பு அலுவலரான ஐஏஎஸ் அரவிந்த் சரண் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். திண்டிவனம் நகரத்திற்கு நீராதாரமாக விளங்கும் ராஜாங்குளம், காவேரிப்பாக்கம் ஏரி, கிடங்கல் ஏரி போன்றவைகள் அமைந்துள்ளன. தற்போது தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நகரின் மையத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு நீராதாரமாக விளங்கிய 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஜாங்குளம் புதர் மண்டிய நிலையில் கழிவுகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் இருந்து வருகின்றது.