எலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் பரிதாப சாவு

புதுச்சேரி,  ஜூலை 18:    புதுவை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்  (55), மேள இசைக் கலைஞர். இவரது மகன் முரளி மனோகரன் (20). கல்லூரி  முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த முரளி சம்பவத்தன்று அங்கிருந்த எலி  பேஸ்ட்டை பிஸ்கட் என நினைத்து தெரியாமல் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் காப்பாற்றி புதுவை அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: