×

சாக்கடை கால்வாய்களை தூர்வார கோரிக்கை

கடலூர், ஜூலை 18: கடலூர் மஞ்சக்குப்பம் குண்டு உப்பலவாடி மெயின்ரோடு பகுதியில் அமைந்துள்ள பத்மாவதி நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.
சங்க தலைவர் கலாநிதி தலைமை தாங்கினார். இணை செயலர் மணிமாறன் வரவேற்றார்.  செயலாளர் சுந்தரமூர்த்தி, சங்க செயல்பாடுகள் குறித்து உரை நிகழ்த்தினார். பொருளாளர் ஜெயக்குமார் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
பத்மாவதி நகர் ஆர்ச் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய்களை தூர்வாரி துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் மகாதேவ்சிங், சட்ட ஆலோசகர் அன்பரசன் உள்பட பலர் கொண்டனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்