×

குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

சேத்தியாத்தோப்பு, ஜூலை 18: சேத்தியாத்தோப்பு அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் இறந்தார். சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்த முத்துவேல் மகன் முருகவேல் (37). சம்பவத்தன்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த பகுதியில் உள்ள குளத்தில் முருகவேல் சடலமாக மிதந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அவரது மனைவி சரிதாவிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சரிதா, ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் எஸ்ஐ சுப்பிரமணியன், எஸ்பியின் தனிப்பிரிவு ஏட்டு கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகவேலுக்கு குடிப்பழக்கம் உண்டு. எனவே மதுபோதையில் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...