×

பெண்ணாடம் பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் பழுது

பெண்ணாடம் ஜூலை 18: பெண்ணாடம் அடுத்த இறையூர் சர்க்கரைஆலை முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் நலன்கருதி கடலூர் எம்பி தொகுதி நிதியில் இருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின்கோபுர விளக்குகள் கடந்த சில மாதங்களாகவே பழுதடைந்துள்ளது. விளக்குகள் உடைந்து கீழே விழுந்து அந்தரத்தில் தொங்குகின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது போல் திட்டக்குடி, ராமநத்தம், முருகன்குடி பகுதிகளிலும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளது. பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags :
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...