×

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கடலூர், ஜூலை 18:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரில்  சிவப்பு சட்டை, வெள்ளை தொப்பி அணிந்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் குப்புசாமி, சேகர், தங்கராசு, முத்து, பாபு உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.  21 மாத ஊதிய நிலுவை தொகை வழங்கிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ. 9,000 வழங்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு, துறை குறைப்பு தொடர்பான ஆதிசேஷையா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும், என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்