×

பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்

புதுக்கோட்டை , ஜூலை 16: புதுக்கோட்டை நகர காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.புதுக்கோட்டை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உத்தரவின்படி புதுக்கோட்டை நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நகர காவல் நிலைய எஸ்ஐ பூர்விகா தலைமையில் போலீசார் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர். பின்னர் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிபடுவதை தடுத்து உயிர் சேதத்தை தவிர்க்க முடியும்.

இதனால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் தங்களது இருசக்கர வாகனங்களை இயக்கக்கூடாது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த விதிமுறைகளை மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள், உறவினர்களிடம் தெரிவித்து போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்களை பாதுகாப்பாக இயக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.


Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ