×

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் 19ம்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 16: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 19ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...