×

கறம்பக்குடி வட்டார வள மையம் சார்பில் 99 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மடிக்கணினி

கறம்பக்குடி, ஜூலை 16: கறம்பக்குடி வட்டார வள மையத்தின் சார்பாக வள மையத்திற்கு உட்பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அரசு சமகிரா திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழி காட்டுதல் படி வட்டார வள மையத்தில் கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர் தலைமையில் 99 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முன்னிலை வகித்தார். இதன் மூலம் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் கற்பித்தல் மேம்படுத்துவதற்கும், பள்ளிகளில் கல்வி வளர்ச்சி அனைத்து விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கும் பயன் உள்ளதாக அமையும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டார வள மையத்திற்கு உட் பட்ட 99 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் வள மையத்தின் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஏராளமானூர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...