×

அரியலூரில் மக்கள்குறைதீர் நாள்கூட்டம்: 529 மனுக்கள்குவிந்தன

அரியலூர், ஜூலை 16: அரியலூர் கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்கலெக்டர் வினய்தலைமையில்நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் இருக்கையில்அமர்ந்திருந்தமாற்றுத்திறனாளிகளிடம் 34 கோரிக்கை மனுக்களை பெற்று இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர், இதில், பல்வேறுகோரிக்கைகள்அடங்கிய 529 மனுக்கள்பொதுமக்களிடமிருந்துபெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறுஅறிவுறுத்தப்பட்டது.மேலும், வருவாய்த்துறையின் மூலம் சமூகபாதுகாப்புத்திட்டம்சார்பில் 30 பேருக்கு மாற்றுத்திறனாளிஉதவித்தொகை, விதவைஉதவித்தொகை, முதியோர் உதவித்தொகை மற்றும் முதிர்கன்னி உதவித்தொகைஆகியஉதவித்தொகை பெறுவதற்கானஆணையினை கலெக்டர் வழங்கினார்.இதில் டிஆர்ஓ. பொற்கொடி, திட்டஇயக்குநர் (ஊரகவளர்ச்சிமுகமை) சுந்தர்ராஜன், துணைஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) .உமாமகேஸ்வரி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது