×

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் 21ம் தேதி நடக்கிறது

பெரம்பலூர்,ஜூலை 16: பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21ம்தேதி நடக்கிறது. கலெக்டர் சாந்தா தகவல். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத் துறைஅலுவலகம் இணைந்துநடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் வருகிற 21ம்தேதி ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 8மணிமுதல் மாலை 3மணிவரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் 8ம்வகுப்பு கல்வித்தகுதி முதல் பி.இ பட்டம்முடித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலையளிக்க உள்ளனர். மேலும் இம்முகாமில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொள்ள உள் ளனர்.இதில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள உள்ளூர் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான வேலைநாடுநர்கள் தேர்வுசெய்யும் பொருட்டு, இம்மு காமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் நிறுவனத்தின்பெயர், மொத்த காலிப் பணியிடங்கள், பணியின்பெயர்,சம்பளம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை பின்வரும் மின்னஞ்சல் முகவரி deoperambalur@gmail.com, 04328-225352 என்றத் தொலைப்பேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது