கோவை, ஜூலை16: கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத ரயில்வே சுரங்க பாலத்தை உடனே திறக்க வேண்டும் என கோவை கலெக்டரிடம் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு மனு அளித்தார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ராசாமணியிடம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.