கோவை, ஜூலை 16: கோவை கரும்புக்கடை பகுதியில் கஞ்சா விற்றதாக சாரமேடு பகுதியை சேர்ந்த தவுபிக் (23), கரும்புக்கடையை சேர்ந்த அன்சர் (24), உக்கடத்தை சேர்ந்த ஆசிக் அலி (23) ஆகியோரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து நகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். ஆத்துப்பாலம், நொய்யல் ஆற்றின் கரைகளில் இவர்கள் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் பலர் இவர்களிடம் வாடிக்கையாளர்களாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.