×

மச்சானை கொன்றவருக்கு ஆயுள் சிறை தண்டனை

திருவில்லிபுத்தூர், ஜூலை 16: அக்காளை கைவிட்ட மைத்துனரை கத்தியால் குத்திக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு ரங்கம்மாள், இந்திராணி என இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்திராணிக்கு செலவுக்கு பணம் கொடுப்பது உட்பட எந்த உதவியையும் நாகராஜ் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இந்திராணியின் தம்பி சுப்புராஜ்(55) கடந்த 2014ல் நாகராஜை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து சுப்புராஜை கைது செய்தனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி பாரி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகராஜை கொலை செய்த சுப்புராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...