×

1ம் தேதி ஊதியம் கிடைக்குமா?

விருதுநகர், ஜூலை 16: விருதுநகர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை சிஐடியு சங்க கிளைக்கூட்டம் நடைபெற்றது. கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட உதவித்தலைவர் மகேஸ்வரி, செயலாளர் பழனிவேல், பொருளாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர். மாநில செயல் தலைவர் அசோகன் கலந்து கொண்டார். கூட்டத்தில், ஊழியர்களுக்கு மாதம் முடிந்தவுடன் முதல் தேதியில் சம்பளம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
ரேஷன் பொருட்கள் அனுப்பியதில் மொத்த பண்டகசாலைக்கு வர வேண்டிய தொகைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிரதம பண்டக சாலைகளில் இருந்து லட்சக்கணக்கில் வரவுஇல்லாமல் உள்ளது. நிர்வாகம் நிறுவனத்திற்கு வர வேண்டிய தொகைகளை உரிய காலத்தில் வசூல் செய்ய வேண்டும் என்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...