×

தீ விபத்தில் டூவீலர்கள் நாசம்

விருதுநகர், ஜூலை 16: குப்பையில் இருந்து தீ பரவியதால் அருகில் இருந்த கடைகளில் பரவி 6 டூவீலர்கள் எரிந்து நாசமானது.
விருதுநகர் அருகேயுள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவர் அல்லம்பட்டியில் டூவீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இதன் அருகில் இருந்த குப்பையில் பிடித்த தீ காற்று அதிகமாக வீசியதால் தொடர்ச்சியாக இருந்த 3 கடைகளில் பரவியது. இதில் பழைய துணிகளும், 6 டூவீலர்களும் எரிந்து நாசமானது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இது தொடப்பாக கிழக்கு  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வைப்பாறு பாலத்தில் மின்விளக்கு கேட்டு மனு

சாத்தூர், ஜூலை 16: சாத்தூர் வைப்பாற்றில் கருவேல மரங்கள் அகற்றும் தொடக்க விழாவிற்கு வருகை தந்த அதிமு எம்எல்ஏ ராஜவர்மனிடம் தமிழ் மாநில காங்கிரஸ்  சாத்தூர் நகர செயலாளர் அய்யப்பன் தலைமையில் அக்கட்சியினர் மனு கொடுத்தனர். மனுவில், சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட புதிய பாலம் திறந்து பல மாதங்கள் ஆகியும் மின் விளக்குகள் இன்று வரையும் பொருத்தப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருப்பதால் மக்கள் நடந்து செல்ல அச்சமாக இருப்பதால் உடனடியாக மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழைய பாலத்தை சீர்செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு