×

கல்விக்கண் திறந்த தந்தைக்கு மரியாதை காமராஜர் பிறந்தநாள் விழா

ராஜபாளையம்/சாத்தூர், ஜூலை 16: காமராஜர் பிறந்தநாள் விழா விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 ராஜபாளையம் அருகே முகவூர் ஊராட்சியில் உள்ள காமராஜர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முகவூர் தெற்குதெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். பள்ளி செயலாளர் முத்துராஜ், தலைமை ஆசிரியர் அறச்செல்வி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் தொந்தியப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மேலும் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கும் எம்எல்ஏ தங்கபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சாத்தூர் முக்குராந்தல் மற்றும் படந்தால் பகுதியில் காமராஜர் உருவ படத்திற்கு தமாகா தெற்கு மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் மாவட்ட துணைதலைவர் பாண்டியன் முன்னிலையில் சாத்தூர் நகர செயலாளர் அய்யப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆயிரம் பேருக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கபட்டது. இதில் நகர துணைத்தலைவர் ஜோதி நிவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் கும்கி கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...